டெல்லி உணவகத்தில் குட்டையான உடை அணிந்திருந்த பெண்களை பார்த்து சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், “உங்களுக்கு வெட்கமாக இல்லையா இது போன்ற குட்டையான உடை அணிவதற்கு?” என்று கூறினார் மேலும் இது போன்ற பெண்கள் கற்பழிக்க படவேண்டும் என்பது போல் கூறியதாக தெரிகின்றது.
இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் , மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இதை பார்த்த பிற பெண்களும் , அந்த இளம்பெண்களுக்கு ஆதரவாக பேசினர். ஆனால் கடைசிவரை அந்தப்பெண் தனது தவறை உணரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் இந்த விடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவிவருகின்றது.