அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் வேலுமணி மற்றும் 9 ஒப்பந்ததாரர்கள் அவர்கள் ஊழல் குறித்து பேச கூடாது என்று இடைக்கால தடை கேட்ட 10 வழக்கில் இன்று காலை சென்னை உய்ரநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வாதிட்டது. இதில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், அறப்போர் இயக்கம், அமைச்சர் வேலுமணியின் ஊழல் குறித்து பேச தடை விதிக்க மறுத்துவிட்டது.